என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கால்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு
- பள்ளி அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் 3 நாட்களாக நடைபெற்றது.
- வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு ேராட்டரி மற்றும் குயின்சிட்டி ரோட்டரிசங்கம், மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் பள்ளி அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் 3 நாட்களாக நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த புனிதமரியன்னை பள்ளி அணிக்கு ரூ.10ஆயிரம் மற்றும் பரிசுகோப்பை வழங்கப்பட்டது.
2-வது இடம் பிடித்த லயோலா அணிக்கு ரூ.7 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த அங்குவிலாஸ் பள்ளி அணிக்கு ரூ.5ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் வழங்கினார்.
மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம், ரோட்டரிசங்க நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், சர்மிளா, ராஜகோபாலான், மல்லிகா, விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, நிர்வாகிகள் ஈசாக், தங்கத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்