search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு
    X

    நிகழ்ச்சியில் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவருக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

    வாசுதேவநல்லூர் அருகே பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு

    • வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பா.ஜ.க. சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
    • சிவகிரியில் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    சிவகிரி:

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நெல்கட்டும்செவல் பஞ்சாயத்து காட்டுப்புரம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் பா.ஜ.க. சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த ஆண்டு பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கணேசன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவரும், சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவருமான வக்கீல் ராம்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொது செயலாளர் தினேஷ், ஒன்றிய துணைத்தலைவர் கோமதி பாண்டியன், மாவட்ட மகளிரணி துணை தலைவர் சுதா, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கருப்பசாமி, கிளை தலைவர்கள் பால்ராஜ், கருப்பசாமி, செயற்குழு உறுப்பினர்கள் குருசாமி, சண்முகவேல், சத்யா, அய்யன் ராஜ், அய்யப்பன், மணிராஜ், ஸ்டீபன்சன், ஏசுராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சிவகிரி

    இதேபோல், சிவகிரியில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். வடக்கு ஒன்றிய செயலாளர் ஒரு சொல் வாசகன் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் கோதண்டராமன், மாவட்ட செயலாளர் அர்ஜூனன், ஓ.பி.சி. அணி மாவட்டத் துணைத்தலைவர் தங்கம், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராகவன், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சேட்டு குமார், கருப்பையா, புலியூரான், முத்துச்சாமி, ஓ.பி.சி. அணி ஒன்றிய துணைத்தலைவர் ரஜினி கருப்பையா, கிளை தலைவர்கள் நடராஜன், மாரியப்பன், முத்துசாமி, பாலமுருகன், ராஜேஷ், மாடசாமி, ராஜேந்திரன், மாவட்ட ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாசு வடக்கு ஒன்றிய செயலாளர் ஒரு சொல் வாசகன் செய்திருந்தார்.

    Next Story
    ×