என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
- தகுதியுடைய பணிநாடு நர்கள் தங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடை யலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை யொட்டி, மாவட்ட நிர் வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தி ற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி, ஆலோ சனை வழங்கி பேசினார்.
இது குறித்து அவர் கூறுகையில், முன்னாள் முதல் அமைச்சர் கருணா -நிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான பணி யாட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதற்கான கல்வித்தகுதி, 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்புகள் ஆகும்.
தகுதியுடைய பணிநாடு நர்கள் தங்களுடைய சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடை யலாம்.
மேலும், இந்த முகாம்களில் கலந்து கொ ள்ளும் பணிநாடு நர்களுக்கு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க ப்படும். இம்முகாமில் பணிநாடுநர்கள் இல வசமாக கலந்துகொள்ள லாம்.
மேலும், இம்முகாம் சிறப்பாக நடைபெற துறை த்தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியினை சிறப்பாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், துணை ஆட்சியர் (பயிற்சி) தாட்சாயிணி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






