search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
    X

    நெல்லை அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

    • சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த நவீன்குமார் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • கொண்டாநகரத்தில் வாட்டர் டேங்க் பகுதியில் நவீன்குமார் மயங்கி கிடந்தார். போலீசார் விரைந்து வந்து நவீன்குமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நெல்லை:

    நெல்லை சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகன் நவீன் குமார் (வயது 25). இவர் நெல்லையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சமீப காலமாக இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு நெல்லையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கொண்டாநகரத்தில் வாட்டர் டேங்க் பகுதியில் இவர் மயங்கி கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×