search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் லாரி மோதி தனியார் கம்பெனி மேலாளர் சாவு
    X

    திண்டிவனத்தில் லாரி மோதி தனியார் கம்பெனி மேலாளர் சாவு

    • முகமது சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேலாளராக இருந்தார்.
    • ஷேக் முகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 45). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேலாளராக இருந்தார். இவர் பக்ரீத் பண்டிகைக்காக திண்டிவனம் வந்திருந்தார். விடுமுறை முடித்து இவரும், இவரது மகன் அப்துல் கலாம் ஆசாத் இருவரும் இன்று சென்னைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது திண்டிவனம் தீர்த்த குளம் பாலம் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஷேக் முகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது மகன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்தில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகன் கண் முன்னே சாலை விபத்தில் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×