search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புழல் ஜெயிலில் கைதி திடீர் உயிரிழப்பு
    X

    புழல் ஜெயிலில் கைதி திடீர் உயிரிழப்பு

    • பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் விசாரணை கைதிகளுக்கான அறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
    • புழல் ஜெயில் தரப்பில் இருந்து புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    வங்காளதேச நாட்டை சேர்ந்தவர் முகமது ஆலா ஷேக் (வயது 45). இவர் கடந்த மாதம் 16-ந்தேதி சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் விசாரணை கைதிகளுக்கான அறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இவருக்கு நேற்று இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புழல் ஜெயில் தரப்பில் இருந்து புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் வயிற்று வலியால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×