search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை

    • செந்தில் அவரை கொலை செய்து வீட்டில் உள்ள பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்தார்.
    • கழிவறைக்கு சென்ற சககைதிகள் இதனை பார்த்து சிறை காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த உமையாள் பதி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மணி என்ற 40 வயது பெண்மணி தனது கணவர் மற்றும் குடும்பத்தினரை புரிந்து கீழவாடியில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.

    அப்போது கொள்ளிடம் அடுத்த பாலூரன் படுகை கிராமத்தைச் சார்ந்த செந்தில் என்ற இளைஞர் உடன் பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழ்மணி மீது சந்தேகப்பட்ட செந்தில் அவரை கொலை செய்து வீட்டில் உள்ள பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்தார்.

    இது தொடர்பாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல் துறையில் புகார் அளித்ததும் தப்பி ஓடி மூங்கில் தோப்பு ஒன்றில் மறைந்திருந்த செந்திலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் கழிவறை சென்று வருவதாக கூறிச் சென்ற செந்தில் கைலியால் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கழிவறைக்குச் சென்ற சக கைதிகள் இதனை பார்த்து சிறை காவலர்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து செந்தில் உடலை கைப்பற்றி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×