search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிள்ளையார்பட்டி ஹரித்திரா விநாயகர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
    X

    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வைத்தியநாதசாமி, தையல்நாயகி அம்மன். வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள்.

    பிள்ளையார்பட்டி ஹரித்திரா விநாயகர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

    • பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
    • வருகிற 25-ந்தேதி கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பிள்ளை யார்பட்டியில் புகழ் பெற்ற ஹரித்திரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமிக்கும் நந்தீஸ்வருக்கும் நேற்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினசரி நடக்கும் மண்டாலாபிஷேக பூஜைகளை முன்னிட்டு மங்கள விநாயகர் என்கிற ஹரித்திரா விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து நடந்த பக்தி இசை கச்சேரியில் ஏராளமான நாதஸ்வரம் , தவில் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு வாசித்தார்கள். முன்னதாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

    வருகின்ற 25-ம்தேதி ஹரித்திரா விநாயகர் கோவிலில் வெகுவிமரிசையாக மண்டலாபிஷேக விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×