என் மலர்
உள்ளூர் செய்திகள்

சீர்காழி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
- ஆச்சாள்புரம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோயில், அரசூர், எடமணல், ஆச்சாள்புரம் ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் சீர்காழி நகர் பகுதிகள், வைத்தீஸ்வரன் கோயில், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையாறு, பழையபாளையம், திருமுல்லைவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி தெரி வித்துள்ளார்.
Next Story






