search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    நாளை மின்சாரம் நிறுத்தம்

    • மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி துணை மின் நிலையம், சூளகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி நகரம், தொழிற்பேட்டை, பவர்ஹவுஸ் காலனி, சந்தைபேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி 1,2, பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலை கல்லூரி, கே.ஆர்.பி. அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூளகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம், பில்லனகுப்பம், கல்லுகுறுக்கி, பூசாரிப்பட்டி, தானம்பட்டி, கொண்டேப்பள்ளி பகுதிகளிலும், அதை சுற்றி உள்ள கிராமங்களிலும் மின்சாரம் இருக்காது.

    அதே போல சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீர்ப்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×