search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்
    X

    கும்பகோணம் பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்

    • சாக்கோட்டை துணைமின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    கும்பகோணம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் நகர உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாக்கோட்டை துணைமின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கும்பகோணம், உமா மகேஸ்வரபுரம், கோசி மணி நகர், தாராசுரம், எலுமிச்சங்கா ய்பாளையம், அண்ணல் அக்ரஹாரம், திப்பிராஜபுரம், அரியத்திடல், சிவபுரம், உடையாளூர், சுந்தர பெருமாள்கோவில், நாச்சியார் கோவில், திருநாகே ஸ்வரம், முருக்கங்குடி, அய்யாவாடி, புதூர், அவனியாபுரம், திருநீலக்குடி, பட்டீஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×