search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வயல்களில் தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பிகள்
    X

    வயல்களில் தாழ்வாக தொங்கியபடி செல்லும் மின் கம்பிகள்.

    வயல்களில் தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பிகள்

    • எந்திரங்களை கொண்டு அறுவடை செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
    • விவசாயிகள் மின்கம்பிகளை கடந்து செல்ல கீழே தவழ்ந்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி மேலக்கரையிருப்பு பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 20 ஏக்கர் அளவிற்கு அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 30 ஏக்கர் விளை நிலங்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில்திரும ருகல் துணை மின் நிலைய த்திலிருந்து வயல்வெளி வழியாக கட்டலாடி, கீழப்பூதனூர் பகுதிகளுக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பங்கள் சேதமடைந்து மின்கம்பிகள் நெற்பயிர்களை உரசி செல்கிறது.

    இதனால் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் உள்ள னர்.

    மேலும் விவசாயிகள் மின் கம்பிகளை கடந்து செல்ல கீழே தவழ்ந்த படி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்த ப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பிகளை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×