search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கலெக்டருக்கு போலீஸ் பாதுகாப்பு
    X

    சேலம் கலெக்டருக்கு போலீஸ் பாதுகாப்பு

    • கலெக்டர்களுக்கும் தனி பாதுகாப்பு அதிகாரி தலைமையில் போலீசார் நியமிக்க அரசுக்கும், டி.ஜி.பிக்கும் உளவுத்துறை பரிந்துரைத்தது.
    • தமிழக முழுவதும் நடந்த கணக் கெடுப்பில் 17 கலெக்டர் களின் பாதுகாப்பு பணிக்கு பி.எஸ்.ஓ நியமிக்கப்படாதது தெரியவந்தது.

    சேலம்:

    அனைத்து கலெக்டர்களுக்கும் தனி பாதுகாப்பு அதிகாரி தலைமையில் போலீசார் நியமிக்க அரசுக்கும், டி.ஜி.பிக்கும் உளவுத்துறை பரிந்துரைத்தது. தமிழக முழுவதும் நடந்த கணக் கெடுப்பில் 17 கலெக்டர் களின் பாதுகாப்பு பணிக்கு பி.எஸ்.ஓ நியமிக்கப்படாதது தெரியவந்தது.

    இதை அடுத்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, விழுப்புரம் கலெக்டர்களுக்கு நேற்று முதல் எஸ்.ஐ தலைமையில் 5 முதல் 7 போலீசார் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல கலெக்டர்கள் ஆய்வு பணிக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் சென்றனர். அதில் புதுக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்ட பெண் கலெக்டர்களுக்கு கொலை மிரட்டல் இருந்தது.

    இதேபோல் சேலம் கலெக்டர் கார்மேகம் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்ட வர்களால் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக உளவு அமைப்புகள் அரசுக்கு அறிக்கை அளித்தனர். இதனால் கலெக்டரின் பாதுகாப்புக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×