என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூடலூரில் தாமதமாக தேர்வு மையத்திற்கு வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு கண்ணீர்விட்டு கதறிய பெண்கள்
- தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் இன்று நடைபெற்றது.
- 9 மணிக்குமேல் வந்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்:
தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் இன்று நடைபெற்றது. இதற்காக தேனி மாவட்டத்தில் பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு காலை 9.30 மணிக்கு ெதாடங்கும் என்றும், 12.30 மணிவரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தேர்வு எழுத வருபவர்கள் காலை 9 மணிக்கே அந்தந்த மையங்களுக்கு சென்றுவிடவேண்டும் எனவும், தாமதமாக வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கூடலுரில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு இன்று 9 மணிக்கு மேலாக 15-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அதில் பலர் கைக்குழந்தைகளுடன் பெண்களும் வந்தனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. 9 மணிக்குமேல் வருபவர்களை உள்ளே அனுமதிக்ககூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே திரும்பிச்செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.
இதனால் ஒருசிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தேர்வுக்காக கடந்த 6 மாதம் கடுமையாக படித்து தயார்படுத்தி இருந்த நிலையில் தேர்வுஎழுத முடியவில்லையே என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் அந்த தேர்வு மையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்