search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி- எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
    X

    விழிப்புணர்வு பேரணியை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

    பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி- எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

    • மக்கும் குப்பை, மக்காத குப்பை இவைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும்.
    • நமது கிராமத்தை நாம் நினைத்தால் மட்டுமே அழகாக வைத்துக் கொள்ள முடியும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சார்பாக நம்ம ஊர் சூப்பர் என்ற திட்டம் ஒவ்வொரு கிராமங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

    விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜ் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி முன்னிலை வகித்தனர்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பேரணியை தொடங்கி வைத்தார்.

    அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை இவைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் தர வேண்டும் எனவும், நமது கிராமத்தை நாம் நினைத்தால் மட்டுமே அழகாக வைத்துக் கொள்ள முடியும் எனவும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் எனவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், துணைத் தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் தியாக.விஜயேஸ்வரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துகுபேரன் மகளிர் சுய உதவிக் குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிறைவில் ஊராட்சி செயலர் தியாகராஜன் நன்றிக் கூறினார்.

    Next Story
    ×