என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே பரிதாபம்:  ரூ.4 லட்சம் கடன் கொடுத்து ஏமாந்தவர் தற்கொலை
    X

    ஓசூர் அருகே பரிதாபம்: ரூ.4 லட்சம் கடன் கொடுத்து ஏமாந்தவர் தற்கொலை

    • சீனிவாசன் ரூ.4 லட்சம் கடனாக கொடுத்துள்ளார்.
    • ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்று மனம் உடைந்த சீனிவாசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள குடிச்சிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40).விவசாயி. அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சீனிவாசன் ரூ.4 லட்சம் கடனாக கொடுத்துள்ளார்.

    பணம் கொடுத்து பல நாட்களாகியும் வாங்கியவர் அதனை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்று மனம் உடைந்த சீனிவாசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சீனிவாசனின் மனைவி ரத்னா தந்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×