search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை  சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக  மிரட்டிய வாலிபர் மீது வழக்கு
    X

    காதலியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் மீது வழக்கு

    • காதலியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலை தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ரவிசங்கர் என்பவரை காதலித்து தற்போது விலகி இருந்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக கொடுக்கும் புகார் மனு சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பேரில் குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ரவிசங்கர் என்பவரை காதலித்து தற்போது விலகி இருந்தார். ஆனால் ரவிசங்கர் தன்னுடன் 25 வயது பெண் சேர்ந்து எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் அனுப்பி விடுவேன் என்று மிரட்டுவதாக புகார் அளித்தார். அதன் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ரவிசங்கர் என்பவர் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    Next Story
    ×