search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான  புகைப்பட தொகுப்பு போட்டி
    X

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான புகைப்பட தொகுப்பு போட்டி

    • பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் வகையில் நடத்தப்படும் இப்போட்டியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்.
    • படத்தொகுப்பை 10 எம்.பி. அளவுக்கு மிகாமல் வருகிற 3-ந்தேதிக்கு (சனிக்கிழமை) முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி கணினி பொறியியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான புகைப்பட தொகுப்பு போட்டி இணையவழியில் நடக்கிறது.

    பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் வகையில் நடத்தப்படும் இப்போட்டியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்.

    இப்போட்டியில் பங்கு பெற மாணவர்கள் https://forms.gle/TAdLy6jBvHHTQtEZ7 என்ற இணைப்பின் மூலம் தங்களது படத்தொகுப்பை 10 எம்.பி. அளவுக்கு மிகாமல் வருகிற 3-ந்தேதிக்கு (சனிக்கிழமை) முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் போட்டிகள் பற்றிய விவரம் அறிய jensi@drsacoe.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 04639-220740 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில், கணினி துறை பேராசிரியர் ஜென்சி மற்றும் பேராசிரியர்கள், துறை மாணவர்கள் செய்துள்ளனர்.

    இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×