search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்.

    மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்

    • இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது.
    • இதர ஆவணங்களுடன் மேற்கண்ட ஐந்து திட்டங்களுக்கும் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் , கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் , உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், வங்கி கடன் மானிய வழங்கும் திட்டம் , அனைத்து வகை திருமண நிதியுதவி தொகை வழங்கும் திட்டம், அனைத்து வகை மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகிய 5 திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது.

    எனவே, இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது http://www.tncsevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் , கைப்பேசிஎண், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் இணைய சேவையில் தேவைப்படும் இதர ஆவணங்களுடன் மேற்கண்ட ஐந்து திட்டங்களுக்கும் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×