என் மலர்
உள்ளூர் செய்திகள்

பச்சையம்மன் கோவில் திருவிழா
- பச்சையம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
- பக்தர்கள் தலையில் கரகங்களுடன் கோவிலை சுற்றி வந்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்த குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் புகழ்பெற்ற அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத திருத்தேர் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது.கடந்த 11-ந் தேதிஅன்று காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த 7-தினங்களாக பச்சையம்மன் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் இரவு திருவீதி உலாவும் நடைபெற்றது. நேற்று காலை சுவாமி மற்றும் பச்சையம்மனுக்கு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் மாலை 3 மணி அளவில் சுவாமி மற்றும் அம்மன் தேரு கொண்டு வரப்பட்டு சிறப்பு தீவாரகனைகள் நடைபெற்றன. பின்னர் கிராம பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் வடம் பிடித்து தேரை கோவிலை சுற்றி ஊர்வலமாக இழுத்து வந்தனர். பின்னர் மாலை ஐந்து மணி அளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் கரகங்களுடன் கோவிலை சுற்றி வந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். கீழப்புலியூர், புதூர், சிறுகுடல், வாலிகண்டபுரம் உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மங்களமேடு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.






