என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து முதியவர் தற்கொலை
    X

    விஷம் குடித்து முதியவர் தற்கொலை

    • கை, கால் வலியால் அவதிபட்டு வந்தவர் தற்கொலை
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

    பெரம்பலூர்.

    தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி வடக்கு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 88). வயது மூப்பின் காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக விஸ்வநாதனுக்கு கை, கால் வலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடந்த 14-ந் தேதி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×