என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாடபுரத்தில் தொழிலாளி தற்கொலை
- லாடபுரத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
- இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம் 7-வது வார்டு, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 45), கூலித் தொழிலாளி. இவருக்கு ரம்யா என்ற மனைவியும், வாணிஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக வாசுதேவன் தனது மனைவி, மகளை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வாசுதேவன் லாடபுரம் புது மாரியம்மன் கோவில் எதிரே உள்ள மூப்பனார் கோவில் முன்புள்ள பந்தலில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாசுதேவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story