என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷ வண்டு கடித்து பெண் பலி
- வயலுக்கு சென்ற பெண்ணை விஷ வண்டு கடித்ததால் உயிரிழந்தார்
- உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் ராயப்பா நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 65). இவர் நேற்று முன்தினம் அடுப்புக்கு விறகு பொறுக்குவதற்காக வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த விஷ வண்டுகள் பழனியம்மாளை கடித்துள்ளது. இந்தநிலையில் முகம் வீங்கிய நிலையில் பழனியம்மாள் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






