என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தை இல்லாத விரக்தியில் பெண் தற்கொலை
- பெரம்பலூரில் குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டியை சேர்ந்த ஜகன் என்பவரின் மனைவி ரஞ்சனிதேவி(வயது 33). இவர்களுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு ரஞ்சனி தேவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் கிடைத்த பெரம்பலூர் போலீசார் களரம்பட்டிக்கு வந்து ரஞ்சனி தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரஞ்சனி தேவி தற்கொலை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருமணமான தம்பதிக்கு இது வரை குழந்தைகள் இல்லை என்பதும், அதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்ததும், இதன் காரணமாக மனமுடைந்த ரஞ்சனிதேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் இளம் தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






