என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    விஷம் குடித்து பெண் தற்கொலை

    • தீராத வயிற்று வலி
    • சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    வேப்பந்தட்டை

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பேபி(வயது 32). இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் கடந்த 23-ந் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கியுள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பேபி உயிரிழந்தார். இது குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×