என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்
- சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து எறையூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முஸ்தபா மகன் அக்பர்அலி (வயது 20). இவர் எறையூர் சர்க்கரை ஆலையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் வரை சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது மங்களமேடு அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அக்பர்அலி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






