என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
- மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடைபெற்றது
- செட்டிகுளம் அரசு பள்ளியில்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுதுரை (பொறுப்பு) தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆலத்தூர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பரிமளா கலந்து கொண்டார். இந்த பயிற்சியில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் நோக்கங்கள், மாணவர்கள் கல்வி கற்பதன் அவசியம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு அளிக்கும் நலத்திட்ட ங்கள், மாணவர்களி பள்ளி வளர்ச்சியில் சமுதாயத்தின் பங்கு, இடைநீற்றல், பெண் கல்வி முக்கியத்துவம் குறித்து,பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள்,பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை, பேரிடர் மேலாண்மை செயல்பா டுகள், போ தைப்பொருட்களை தவிர்த்து பாதுகாப்பாக இருப்பது ஆகியவை குறித்து கூறப்பட்டது.
முகாமில் உதவி தலைமையாசிரியர் லதா, ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளரு ம்,தெழிற்கல்வி ஆசிரியருமான ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு, ஒன்றிய குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கவிதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் விஜய்அரவிந்த், வெங்கடேஷ்வர், சுகந்தி, மகாலெட்சுமி, கயல்விழி, பரமேஸ்வரி, மீனா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் கலியமூர்த்தி வரவேற்றார்.நிறைவாக பள்ளி ஆசிரியர் தெய்வானை நன்றி கூறினார்.






