என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
- பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
- புத்தாக்கமேம்பாட்டுத் திட்டத்தில்
பெரம்பலூர்:
பெரம்பலூர் வட்டார வள மையத்தில் பள்ளி புத்தாக்கமேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. அரசின் குறு சிறு நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது பள்ளி கல்வித்துறை மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் என்கிற திட்டத்தினை செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தினை செயல்படுத்த பள்ளி கல்வித்துறையின் மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் களஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்த ஒரு வழிகாட்டி ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு பள்ளி புத்தாக்கமேம்பாட்டுத் திட்டம் குறித்தும் அதனை 9-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கொண்டு செல்லும் பொருட்டு ஒருநாள் பயிற்சி நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கிவைத்தார். யுனிசெப் நிறுவன கருத்தாளர் ராஜேஷ், திருச்சி அண்ணா பல்கலைகழக கள ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் 46 வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.






