என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
    X

    புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

    • புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • 90 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் பாடாலூர் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி(வயது 52) என்பவர் தனது வீட்டின் பின் பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்த மொத்தம் சுமார் 90 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×