என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
    X

    திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

    • வேப்பந்தட்டை பூலாம்பாடியில் திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

    அரும்பாவூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியில் உள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. யாகம் வளர்த்து பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓதினர்.அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் திருமாங்கல்யத்தை தொட்டு வணங்கி கொடுத்தனர்.பின்னர் கெட்டிமேளம் வாசிக்க ஸ்ரீதிரௌபதிஅம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் டத்தோ பிரகதீஸ்குமார் மற்றும் முக்கியபிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    சுவாமி திருவீதி உலா முடிந்து கோவிலுக்கு வந்தடைந்தது.அதைத்தொடர்ந்து கோவிலில் யாக பூஜைகள் நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து நாட்டுக்கல் மனக்காட்டிலிருந்து தீர்த்தகுடம்,அக்னி சட்டி எடுத்தல் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடை பெற்றது.இன்றிரவு டிவி புகழ் ஈரோடு மகேஷ் மற்றும் ஆக்காட்டி ஆறுமுகம் பங்குபெறும் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.விழாவின் முக்கிய நிகழ்வான வருஷாபிஷேகம் நாளை (23-ந்தேதி) காலை 7.30மணிக்கு நடக்கிறது.24-ந்தேதி பொங்கல் மாவிலக்கு பூஜையும், அன்றிரவு வானவேடிக்கையுடன் ஏழு வாகனங்களில் சுவாமிகளின் ஊர்வலம் நடைபெறும்போது,ஒயில் கும்மி மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக 25-ந்தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மாலையில் ஸ்ரீ தர்மராஜா பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திரௌபதி அம்மன் கோவில் அறக்கட்டளையினர் மற்றும் கிராம மக்கள் டத்தோ பிரகதீஸ்குமார்இளைஞர் நற்பணிமன்றத்தினர் செய்து வருகின்றனர்

    Next Story
    ×