என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
    X

    லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

    • லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்
    • கணவன் கண் முன்னே நடந்த சம்பவம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி இந்திராணி (வயது 32). நேற்று இரவு பிரகாசமும், இந்திராணியும் பெரம்பலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லாரி சென்று கொண்டிருந்தது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் மீது அந்த லாரி மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பிரகாசம் சாலையின் வலது பக்கம் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்திராணி சாலையின் இடது பக்கம் விழுந்ததால் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே கணவன் கண் முன்னே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பிரகாசத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தை கண்டித்தும், அடிக்கடி விபத்து ஏற்படும் இந்தப்பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கின.

    Next Story
    ×