search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை
    X

    அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை

    • வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளை
    • நகை, பணத்தை அள்ளிச் ெசன்ற மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து பெருமத்தூர் நல்லூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் துரைசாமி மகன் ராமச்சந்திரன் (வயது 40). இவர் தனது மனைவியுடன் சின்னாறு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பெருமத்தூர் நல்லூர் கிராமத்தில் உள்ள சொந்த வீட்டில் மாடுகளை வளர்ந்து வருகிறார்.தினமும் அதிகாலை வந்து பால் கறந்து எடுத்து செல்வது வழக்கம். இதேபோல் நேற்று அதிகாலை பால் கறக்க வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த தெற்கு தெருவில் வசித்து வருபவர் தேவராஜன் மகன் பிரபாகரன் (32). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக பெரம்பலூர் வரை சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது நான்கு பவுன் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இச்சம்பவம் குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் மங்களமேடு காவல்துறையினர் இரு வழக்குகளையும் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும்மோப்ப நாய்படை பிரிவினர் பெருமத்தூர் நல்லூர் கிராமத்திற்கு வரவழைத்து மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×