என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன விபத்தில் வாலிபர் பலி
    X

    வாகன விபத்தில் வாலிபர் பலி

    • வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
    • வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சித்தளி கிராமம், தெற்கு தெருவில் வசிப்பவர் செல்வராஜ். மகன் சம்பத் (வயது 25). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

    விடுறைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான சித்தளிக்கு வந்தார்.

    இந்நிலையில் பெரம்பலூருக்கு சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் சம்பத் சென்றார். பேரளி பால்பண்ணை அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே அரியலூரை நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சம்பத், படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் சம்பவம் நடத்த இடத்திற்கு விரைந்து சென்று, சம்பத் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார், வித்து ஏற்படுத்திய லாரி ஒட்டுநர் பெரம்பலூர் கிரின்சிட்டியை சேர்ந்த சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×