என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ராஜசேகர் (வயது 29). இவருக்கு கடந்த ஒரு ஆண்டாக ஒற்றை தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜசேகர் நேற்று மதியம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×