என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி
- கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட ெபாதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை ெ பற்றார்.அப்போது கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு தம்பதி மனு கொடுக்க வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனை செய்தனர். அப்போது பெண்ணின் கைப்பையில் பாட்டிலில் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் அதனை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர. விசாரணையில், அவர்கள் வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது63). அவர் மனைவி விஜயா என்பதும் தெரியவந்தது. இவர்கள் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளத்தை தழுதாழை கிராமத்தை சேர்ந்த மணிச்செல்வன் (60). இவரது மகன் தமிழ்செல்வன். கந்தசாமி மகன் கோபிநாத் (38), ஜெகன் (22), மற்றும் அரும்பாவூரை சேர்ந்த இளங்கோவன் (40) ஆகியோர் அத்துமீறி நுழைந்து முத்துசோள பயிரினை அறுத்து திருடி சென்று விட்டனராம்.இது குறித்து கணேசன் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் மணிச்செல்வன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் தொடர்புடையர்களை இதுவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த கணேசன், அவரது மனைவி விஜயா கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து கணேசன் கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு சென்றார்.






