என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு

    • பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
    • மகா அபிஷேகம் நடத்தப்பட்டது

    பெரம்பலூர்

    இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் 4 சனிக்கிழமைகள் தான் வந்தன. எனவே பெருமாள் பக்தர்கள் ஐப்பசி மாத முதல் சனிக்கிழமையை புரட்டாசி மாத 5-வது சனிக்கிழமையாக பாவித்து நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதன்படி பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார், கோதை ஆண்டாள் நாச்சியார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6 மணிக்கு சேத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பெருமாள் கோவிலுக்கு கவச வீதி உலா நடந்தது. அதனை தொடர்ந்து கோவிலில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. பின்னர் பிரசன்ன வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், கோதை ஆண்டாள் நாச்சியார் ஆகிய மூலவர்களுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசிய கவசம் சாத்தப்பட்டு, மதியம் 12 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்."

    Next Story
    ×