என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மைய உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி
    X

    மைய உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி

    • மைய உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது
    • நான் முதல்வன் மாணவர் வழிகாட்டி சார்பில் நடைபெற்றது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதாத மாணவர்களை தேர்வு எழுத வைப்பதற்கும், அவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கும், அனைவரையும் நூறு சதவிகிதம் உயர் கல்வியில் சேர்ப்பதற்காக மாணவர் வழிகாட்டி மைய உறுப்பினர்களுக்கு நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் கற்பகம் துவக்கி வைத்தார்.

    நான் முதல்வன் மாணவர் வழிகாட்டி மைய உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் கற்பகம், மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்கும், உயர்நிலை கல்வி கற்பதன் அவசியம் குறித்தும், பயிற்சியின் முக்கியத்துவம், மாணவர் உயர்கல்விக்கான தேவை மற்றும் அவசியம் குறித்தும் இதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றோர், தேர்ச்சி பெறாதோர் மற்றும் இடைநின்ற மாணவர்கள் என ஒருவர் கூட விடுபடாமல் அவர்கள் விரும்பிய உயர் கல்வியினை அவர்களாகவே தேர்வு செய்து உயர் கல்வி பயில்வதற்கும், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களை உடனடி தேர்வு எழுத வைத்து உயர் கல்வியில் சேரும் வாய்ப்பு கிடைத்திடும் வகையிலும், இடைநின்ற மாணவ மாணவிகளுக்கு அதிக ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வினை வழங்கி உயர்கல்வி மற்றும் விரும்பும் திறன்சார் பயிற்சி பெறும் வாய்ப்பினை உறுவாக்குவதற்காக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

    வேப்பூர் ஒன்றியத்தில் 185 உறுப்பினர்களுக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 164 உறுப்பினர்களுக்கும், பெரம்பலூர் ஒன்றியத்தில் 144 உறுப்பினர்களுக்கும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 150 உறுப்பினர்களுக்கும், பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி உதவித்திட்ட அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×