என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் சிறப்பு புகைப்பட காண்காட்சி
- பெரம்பலூரில் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது
- சுதந்திர போராட்ட வீரர்கள், நலத்திட்ங்கள் குறித்து
பெரம்பலூர்:
மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் என்ற தலைப்பில் மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி பெரம்பலூரில் தொடங்கியது.
சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலக மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குனர் மா.அண்ணாதுரை தலைமை வகித்து அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் சிறப்பு க்கள் மற்றும் மத்திய அரசு திட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் குத்துவிளக்கேற்றி வைத்து கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட சித்த அலுவலர் எஸ்.காமராஜ் ,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆர். சுகந்தி பேசினர்.
கண்காட்சியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் வீரர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. குறித்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், இந்திய அஞ்சல் துறை, சித்தா, மாவட்ட சமூக நலத்துறை ,தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டு திட்டங்கள், நல திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருச்சி மத்திய மக்கள் தொடர்பக கள் விளம்பர அலுவலர் கே.தேவிபத்மநாபன் வரவேற்றார். உதவியாளர் கே. ரவீந்திரன் நன்றி கூறினார்.