என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு, பட்டுப்புழுவளர்ப்பு தொழிலில் குறித்த கருத்தரங்கம்
- விவசாயிகளுக்கு, பட்டுப்புழுவளர்ப்பு தொழிலில் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது
- பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவது தொடர்பான கருத்தரங்கினை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாபுதிய பேருந்து நிலையம் அருகிலு–ள்ள தனியார் உணவக கூட்ட அரங்கில் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசிய–தாவது: பெரம்பலூர் மாவட்ட–த்தில் பட்டு வளர்ச்சிதொழில் குறித்து நவீன தொழில்நுட்ப கருத்தரங்கு முதன் முறையாக நடைபெறுகிறது. நமது பெரம்பலூர் மாவட்டம் ஏற்கனவே மக்காச்சோளம், சின்ன வெங்காயம் போன்ற பொருட்களின் உற்பத்தியில் முதன்மையான மாவட்ட–மாக திகழ்ந்து வருகிறது. தனிமனித வருமானத்தை பெருக்க கூடியஅளவில் குறிப்பாக சிறு, குறு விவசாயி–களின் வருமானத்தை பெருக்கும் வகையில்பட்டு வளர்ச்சி துறையில் பல்வேறு பயிற்சிகள் உள்ளது.
பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் நவீன தொழில்நுட்பம் பற்றி கருத்துக்களை பரிமாறும் வகையிலும், பட்டு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை பட்டு வளர்ச்சி துறை வல்லுநர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியினை இங்கு உள்ள விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொ–ள்கி–றேன்.
ஒரு வருடத்தில் பத்து மாதங்க–ளுக்கு உங்களுக்கு நிரந்தர வருமானம் கிடை–க்கும். 20 வருடங்க–ளுக்கு முன்பு பட்டு வளர்ச்சி தொழில் செய்த முறைக்கும், தற்போது பட்டு வளர்ச்சி தொழில் செய்பவர்களுக்கும் தொழி–ல்நுட்ப ரீதியாக அதிக வேறு–பாடுகள் உள்ளது. எனவேஉறுதியாக பட்டு தொழில் என்பது வருமானத்தை அளிக்க–க்கூடிய தொழிலாக உள்ளது. எனவே கருத்தரங்கில் விவசாயிகளான உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அலுவலர்களிடம் கேட்ட–றிந்து பயன்பெற வே–ண்டும்.
இவ்வாறு அவர் தெரிவி–த்தார்.
இந்தக் கருத்தரங்கில் மத்திய பட்டு வாரிய இயக்கு–நர் பாபுலால், துணை இயக்கு–நர் சந்திரசேகரன் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்