என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் சன்மார்க்க சங்க போட்டி: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
- பெரம்பலூரில் சன்மார்க்க சங்க போட்டி: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலார் 200 முப்பெரும் விழாவையொட்டி சன்மார்க்க சங்கம் சார்பில் நாளை (16ம்தேதி) நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சன்மார்க்க சங்க மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூரில் வரும் 18ம்தேதி தேதி நடைபெற உள்ள வள்ளலார் 200 முப்பெரும் விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் , மாணவியர்களுக்கான சன்மார்க்க பேச்சுப்போட்டி, திருவருட்பா ஒப்புவித்தல் போட்டி, திருவருட்பா இசை போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள மரகதவல்லி தாயார் திருமண மண்டபத்தில் நாளை (16ம் தேதி) காலை 10 மணியளவில் தொடர்ந்து நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும் பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.






