search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிருக்கான சாலையோர சைக்கிள் போட்டி
    X

    மகளிருக்கான சாலையோர சைக்கிள் போட்டி

    • மகளிருக்கான சாலையோர சைக்கிள் போட்டி நடந்தது
    • உடற்கல்வி ஆய்வாளர் தொடங்கிவைத்தார்

    பெரம்பலூர்:

    பள்ளிக்கல்வி துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான மகளிருக்கான புதிய விளையாட்டுகளான சிலம்பம், ஜூடோ , சாலை யோர சைக்கிள் போட்டி ஆகிய போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் விளையாட்டு போட்டியினை தொடங்கி வைத்தார். சிலம்பம், ஜூடோ , சாலை யோர சைக்கிள் போட்டி ஆகிய போட்டிகள் 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர்.

    சாலையோர சைக்கிள் போட்டியில் 14 வயதில் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பேரழகி முதலிடத்தையும், பாடாலூர் ஸ்ரீ அம்பாள் மேல்நிலைப்பள்ளி மாணவி தியா இரண்டாம் பரிசினையும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி மூன்றாம் பரிசினையும் வென்றனர்.

    17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மிருதுல்லா முதலிடத்தையும், கிழுமத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சுபாஷினி இரண்டாம் பரிசினையும், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா மூன்றாம் பரிசினையும் வென்றனர்.

    19 வயதுக்குட்பட்ட பிரிவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தேவிகா முதல் பரிசினையும், காரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பூமிகா இரண்டாம் பரிசினையும், கிழுமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தோஷினி மூன்றாம் பரிசினையும் வென்றனர்.

    ஜூடோ போட்டியில் பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ஜான்சிராணி முதலிடத்தையும், அகரம் புனித மேரிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜீவிகா இரண்டாம் இடத்தையும், சிலம்பம் போட்டியில் புதுவேட்டடக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சாருலதா முதலிடத்தையும், மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆனந்தி இரண்டாம் இடத்தையும், துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி செல்லம்மாள் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.

    இந்த போட்டிகளில் முதலிடத்தை பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    Next Story
    ×