search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் - மாணவர்கள் கோரிக்கை
    X

    பள்ளிக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் - மாணவர்கள் கோரிக்கை

    • எம்.ஜி. ஆர் காலணி மற்றும் இந்திரா காலணியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்க்கு உள்ள பாதையில் குடிநீர் உடைப்பை சரி செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.
    • பள்ளம் சரியாக மூடப்படததால் இந்தபாதையை பயன் படுத்தும் பள்ளிமாணவர்கள் சுமார் 1 கிமீ தூரம் சுற்றி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்க்கு உட்பட்டது தெரணி கிராமம். இந்தகிராமத்தில் உள்ள எம்.ஜி. ஆர் காலணி மற்றும் இந்திரா காலணியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்க்கு உள்ள பாதையில் குடிநீர் உடைப்பை சரி செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.

    பின்னர் குடிநீர்குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. ஆனால் பள்ளம் சரியாக மூடப்பட வில்லை.இதனால் இந்தபாதையை பயன் படுத்தும் பள்ளிமாணவர்கள் சுமார் 1 கிமீ தூரம் சுற்றி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொது மக்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே அந்த பாதையை சரி செய்து தரவேண்டும் என தெரணி கிராம மக்களும் மாணவ, மாணவிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×