என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை
Byமாலை மலர்25 Jun 2022 7:35 AM GMT
- மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- 150 பேரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையிலான வங்கி கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி 18 முதல் 50 வயது வரை உள்ள 150 மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் 120 மனுக்கள் மீது வங்கிகளுக்கு பரிந்துரைத்து உடனடியாக கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இன்று (சனிக்கிழமை) ஆலத்தூர் தாலுகா, மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் வேலை வாய்ப்பு அளிக்க உள்ளனர்.
எனவே அந்த முகாமிலும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் ேகட்டுக்கொண்டார்."
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X