என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தேர்வு எழுதாதவர்களுக்கு மறுத்தேர்வு
    X

    தேர்வு எழுதாதவர்களுக்கு மறுத்தேர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுத்தேர்வில் ஆப்செண்ட் ஆனவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு நடத்தப்படும்
    • அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்

    பெரம்பலூர்,

    தமிழகத்தில் பிளஸ் 2 தமிழ் பாடத்தேர்வினை எழுதாத மாணவ, மாணவிகளுக்காக மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குன்னம் பஸ்ஸ்டாப் புதிய கட்டடம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகளையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.தொடர்ந்து குன்னம் எம்எல்ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுக்கான நூலகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, அங்கிருந்த குறிப்பேட்டில் தான் கலைஞர் படிப்பகத்தை திறந்து வைத்தது பெருமை, மகிழ்ச்சி என்றும், அமைச்சர் சிவசங்கரின் பணி தொடர வாழ்த்துக்கள் எனவும் எழுதி கையெழுத்திட்டார்.பின்னர் அமைச்சர் உதயநிதி நிருபர்களிடம் கூறுகையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது வருகிறது. இதில் தமிழ் பாடத்தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொள்ளவில்லை. தமிழக அரசு தொடர்ந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகல்வித்துறை அமைச்சரிடம் பேசி மீண்டும் மறுத்தேர்வு நடத்தி தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும். அதற்கான நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மேற்கொள்வார்திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் பத்தாண்டுகளாக அதிமுக அரசு பெரம்பலூரில் அரசு மருத்துவ கல்லூரியை அமைக்காமல் அதை கிடப்பில் போட்டுவிட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகி மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்கும். பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் சிந்தடிக் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×