search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பணிநேர நீட்டிப்பு உத்தரவை திரும்ப பெறக்கோரி

    பெரம்பலூர்

    அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் பெரம்பலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த ஒரு மாதமாக தபால் துறையில் மாக்-காமிஷ் என்ற கணினி மென்பொருள் சரிவர வேலை செய்யாத தொழில்நுட்ப கோளாறு காரணத்தால், பொதுமக்களுக்கு தினசரி பரிவர்த்தனைகளில் இடையூறு ஏற்படுகிறது. இதனால் தபால் ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படுவதை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியும், பணிநேர நீட்டிப்பு உத்தரவை திரும்ப பெறக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் ஊழியர் சங்கத்தின் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி தலைவர் செல்வகணேசன் தலைமை தாங்கினார். இதில் தபால் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×