search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு-கலெக்டர் வழங்கினார்
    X

    பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு-கலெக்டர் வழங்கினார்

    • பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் வழங்கினார்
    • குடும்ப அட்டைதாரர்களுக்கு தினமும் 250 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் 282 ரேஷன் கடைகள் மூலம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 267 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஆலம்பாடி சமத்துவபுரத்தில் உள்ள அமராவதி அங்காடியில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார்.

    ஏற்கனவே ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக வழங்கப்பட்ட டோக்கன் முறையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தினமும் 250 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது வரும் 13-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை) பாண்டியன், பெரம்பலூர் நகரமன்றத்தலைவர் அம்பிகா, நகர மன்ற உறுப்பினர்கள் சிவக்குமார் துரை காமராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×