search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
    X

    மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

    • சி.ஐ.டி.யூ. சார்பில் புது பஸ் ஸ்டாண்டு அருகே நடைபெற்றது
    • பொதுத்துறையை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நேற்று தொடங்கியது. பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார்.விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அகஸ்டின் பேசுகையில், பொது த்துறைகளை பாதுகா க்கவும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்தனர்.பின்னர் குரும்பலூர், அம்மா பாளையம், நக்க சேலம், செட்டிகுளம், பாடாலூர், கொளக்கா நத்தம், சிறுவாச்சூர், குன்னம், வேப்பூர், அகரம் சீகூர், லப்பைகுடிக்காடு ஆகிய கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த பிரச்சாரம் இன்றும் நடைபெறுகிறது.நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் ரெங்கராஜ், ஆறுமுகம். இன்பராஜ், பாபு, செல்லதுரை, கருணாநிதி, அருண், விவசாயி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் செ ல்வராஜ், அர்ச்சுனன், விவசாயிகள் சங்க நிர்வா கிகள் கோவிந்தன், கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×