என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கார்-பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலி
- பெரம்பலூர் அருகே கார்-பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்
- பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் இவரது மகன் வேல்முருகன் (வயது 28). இவர் நேற்று மாலை நாமக்கல்லில் உள்ள நண்பரை பார்த்து விட்டு பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.
அப்போது பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் உள்ள மட்ட பாறை கிராமத்தில் ஒரு டீக்கடை முன்பு வந்த போது பெரம்பலூரில் இருந்து துறையூர் சென்ற அரசு பேருந்து எதிர்பாரா விதமாக வேல்முருகன் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வேல்முருகன் உயிரிழந்தார். இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த யாருக்கும் காயம் இல்லை. நடத்துனருக்கு காயம் ஏற்பட்டது.
அரசு பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் கைது செய்யப்பட்டார். பலியான வேல்முருகன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்