என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாசி மக திருவிழாவையொட்டி குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
    X

    மாசி மக திருவிழாவையொட்டி குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

    • மாசி மக திருவிழாவையொட்டி குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையான வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள திருவாலந்துறை, திருமாந்துறை, திருவட்டத்துறை என 7 துறைகள் உள்ளது. இதில் 3-வது துறையாக விளங்குகிற சு.ஆடுதுறை கிராமத்தில் குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் மாசி மக திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி மக திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி பஞ்சமுர்த்திகளுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18-வகையான முலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சாமி திருத்தேருக்கு கொண்டுவரப்பட்டார்.

    பின்னர் திருஷ்டி பூஜைகள் நடத்தப்பட்டு, வாண வேடிக்கையுடன் ராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள் பக்தி கோஷத்துடன் பக்தி பாடல்கள் பாடியபடி தேரோடும் நான்கு வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர். இந்த தேரோட்ட விழாவில் ஆடுதுறை, ஒகளுர், பெண்ணக்கோனம், அத்தியூர் கிராமங்களைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×