search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி மூதாட்டி பலி
    X

    கார் மோதி மூதாட்டி பலி

    • பெரம்பலூரில் கார் மோதி மூதாட்டி பலியானார்
    • விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுவயலூா் தெற்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 67). இவர் கடந்த 16-ந்தேதி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரூர்-காரை பிரிவு சாலை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த காா் எதிர்பாராதவிதமாக மூதாட்டி தனலட்சுமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனலட்சுமி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×